Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0013


அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue 
வான் சிறப்பு - The Blessing of Rain

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மு. உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) விண் இன்று பொய்ப்பின் = மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின்;
விரிநீர் வியன் உலகத்துள் = கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்;
நின்று உடற்றும் பசி = நிலைபெற்று உயிர்களை வருத்தும் பசி.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
கடலுடைத்தாயினும் அதனாற் பயனி்ல்லை என்பார் 'விரிநீர் வியனுலகத்'தென்றார்; உணவின்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.

கருணாநிதி  உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

Couplet :
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

Explanation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.


No comments