Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0010

அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
கடவுள் வாழ்த்து - The Praise of the God

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மு. உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் 'பிறவிப்பெருங்கடல்' என்றார். 'சேர்ந்தார்' என்பது சொல்லெச்சம்.
உலகியல்பை நினையாது, இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவியறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும்ஆகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.

கருணாநிதி  உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

Couplet:
None can swim the great sea of births but those who are united to the
feet of God.

Explanation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.


No comments