Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0009


அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
கடவுள் வாழ்த்து - The Praise of the God

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மு. உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியின் குணம் இல = தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன் படுதலை உடையவல்ல;
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை = எண்வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூயவுடம்பினன்ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும்உணர்தல், இயல்பாகவே பாசங்களின்நீங்குதல், பேரருள்உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை எனஇவை. இவ்வாறு சைவ ஆகமத்துக் கூறப்பட்டது.
'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடையிலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.
காணாத கண் முதலியனபோல, வணங்காத தலைகள் பயனிலவெனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க.
இவை மூன்று பாட்டானும், அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலுஞ் செய்யாவழிப் படும்குற்றம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

Couplet:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

Explanation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.


No comments