Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0195

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
பயனில சொல்லாமை - Against Vain Speaking

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

மு. உரை:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
பரிமேலழகர் உரை:
பயன் இல நீர்மை உடையார் சொலின்= பயனிலவாகிய சொற்களை இனியநீர்மையுடையார் சொல்லுவாராயின்;
சீர்மை சிறப்பொடு நீங்கும்= அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்
பரிமேலழகர் உரை விளக்கம்
'நீர்மை', நீரின்தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.
கருணாநிதி  உரை:
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
Couplet:
If the good speak vain words their eminence and excellence will leave them.
Explanation:
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.


No comments