Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0186

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting


பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 

திறன்தெரிந்து கூறப் படும்.


மு.வ உரை:

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

பரிமேலழகர் உரை 
பிறன் பழி கூறுவான்= பிறன் ஒருவன் பழியை அவன் புறத்துக் கூறும் அவன்;
தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்= தன் பழி பலவற்றுள்ளும் உளையும்திறம் உடையவற்றைத் தெரிந்து அவனாற் கூறப்படும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
புறத்து என்பது அதிகாரத்தாற் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவனிறந்து பட்டு உளையுந் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின் 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.

கருணாநிதி  உரை:

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

Couplet:

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

Explanation:

Who on his neighbours' sins delights to dwell, 

 The story of his sins, culled out with care, the world will tell.


No comments