Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0185

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting 

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

மு.வ உரை:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

பரிமேலழகர் உரை

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை= புறஞ்சொல்லுவான் ஒருவன் அறனை நன்று என்று சொல்லினும், அது தன் மனத்தானாய்ச் சொல்லுகின்றான் அல்லன் என்பது;

புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும்= அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.

பரிமேலழலகர் உரை விளக்கம்

மனந்தீது ஆதலின் அச்சொல் கொள்ளப் படாது என்பதாம்.

கருணாநிதி  உரை:
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

Couplet:
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

Explanation:
The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims.

No comments