Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0184

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting 

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 

முன்னின்று பின்நோக்காச் சொல்.

மு.வ உரை:

எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

பரிமேலழகர் உரை 
கண் நின்று கண் அறச் சொல்லினும்= ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னான் ஆயினும்;
முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க= அவன் எதிரின்றிப் பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாது ஒழிக.
பரிமேலழகர் உரை விளக்கம்
பின் ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்லின்மேல் ஏற்றப்பட்டது.

கருணாநிதி  உரை:

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

Couplet:

Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

Explanation:

In presence though unkindly words you speak, say not 

 In absence words whose ill result exceeds your thought.


No comments