Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0165

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அழுக்காறாமை - Not Envying

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.

மு.வ உரை:
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

பரிமேலழகர் உரை

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது= அழுக்காறு பகைரை யொழிந்தும் கேடு பயப்பது ஒன்றாகலின்;

அழுக்காறு உடையார்க்கு அது சாலும்= அவ் வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேணாடா, கேடு பயத்தற்கு அதுதானே அமையும்.


பரிமேலழகர் உரை விளக்கம்

அதுவே என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.


கருணாநிதி  உரை:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

Couplet:
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

Explanation:
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate..

No comments