Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0134

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

ஒழுக்கமுடைமை - The Possession of Decorum

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மு.வ உரை:

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும்= கற்ற வேதத்தினை மறந்தான் ஆயினும் அவ்வருணம் கெடாமையிற் பின்னும் அஃது ஓதிக் கொளலாம்;
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்= அந்தணனது உயர்ந்த வருணம் தன்னொழுக்கம் குன்றக் கெடும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான் 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

கருணாநிதி  உரை:

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

Couplet:

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

Explanation:

Though he forget, the Brahman may regain his Vedic lore;

 Failing in 'decorum due,' birthright's gone for evermore.

No comments