Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0121

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அடக்கமுடைமை - The Possession of Self-restraint

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

மு.வ உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

பரிமேலழகர் உரை

அடக்கம் அமரருள் உய்க்கும்= ஒருவனை அடக்கமாகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்;

அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும்= அடங்காமையாகிய பாவம் தங்குதற்கரிய இருளின்கட் செலுத்தும்.

பரிமேலழகர் உரை விளக்கம்

இருள் என்பது ஓர் நரகவிசேடம்.

"எல்லாம், பொருளிற் பிறந்துவிடும்"(நான்மணிக்கடிகை-07) என்றாற் போல `உய்த்துவிடும் என்பது ஒருசொல்லாய் நின்றது.

கருணாநிதி  உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

Couplet:
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

Explanation:
Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.

No comments