Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0107

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

மு. உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

பரிமேலழகர் உரை:
தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு= தங்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை;
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்= எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.

பரிமேலழகர் உரை விளக்கம்:
'எழுமை' யென்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை; அது 'வளையாபதி'யுட் கண்டது. எழுவகைப்பிறப்பும் மேலே உரைத்தாம் (திருக்குறள்: 62). விரைவு தோன்ற 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது, துன்பந் துடைத்தலான் அவர்மாட்டுளதாகிய அன்பு பிறப்புத்தோறுந் தொடர்ந்து, அன்புடையராதல்.
இவை இரண்டு பாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

Couplet:
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.

Explanation:
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.


No comments