குறள் - 0105
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
மு.வ உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
உதவி உதவி வரைத்து அன்று= கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானுமாகிய் மூவகையானும் முன்செய்த உதவியளவிற்றன்று;
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து= அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி யளவிற்று.
பரிமேலழகர் உரை விளக்கம்:
சால்பு எவ்வளவு பெரிதாயிற்று உதவியும் அவ்வளவு பெரிதாம் என்பார் 'சால்பின் வரைத்து' என்றார்.
இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும், அறிவார்க்குச் செய்தவழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
Couplet:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
Explanation:
The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.
The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.

No comments