Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0105

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude

உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

மு. உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பரிமேலழகர் உரை:
உதவி உதவி வரைத்து அன்று= கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானுமாகிய் மூவகையானும் முன்செய்த உதவியளவிற்றன்று;
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து= அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி யளவிற்று.

பரிமேலழகர் உரை விளக்கம்:
சால்பு எவ்வளவு பெரிதாயிற்று உதவியும் அவ்வளவு பெரிதாம் என்பார் 'சால்பின் வரைத்து' என்றார்.
இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும், அறிவார்க்குச் செய்தவழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

Couplet:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

Explanation:
The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.


No comments