குறள் - 0104
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude
தினைத்துணை நன்றி
செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
மு.வ உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
பரிமேலழகர் உரை:
தினைத்துணை நன்றி செயினும்= தமக்குத்தினை அளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்;
பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்= அதனை அவ்வளவிற்றாகக் கருதாது பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'தினை' 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனங் கருதுவார்க்கு வரும் பயன்.
கருணாநிதி உரை:
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
Couplet:
Though the benefit conferred be as small as a millet seed,
those who know its advantage will consider it as large as a palmyra fruit.
Explanation:
Each benefit to those of actions' fruit who rightly
deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.

No comments