குறள் - 0103
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் – Gratitude
பயன்தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
நன்மை கடலின் பெரிது.
மு.வ உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
பரிமேலழகர் உரை:
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்= இவர்க்கு இதுசெய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்;
நன்மை கடலி்ற் பெரிது= அதன் நன்மை கடலினும் பெரிதாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
இவை மூன்றுபாட்டானும் முறையே காரணமின்றிச் செய்ததூஉம், காலத்தினாற் செய்ததூஉம், பயன்தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
சாலமன் பாப்பையா உரை:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
Couplet:
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
Explanation:
A Kindness shown by those who weigh not what the return may
be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea.
When you ponder right its merit, 'Tis vaster than the sea.

No comments