Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0103

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் Gratitude

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

மு. உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

பரிமேலழகர் உரை:
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்= இவர்க்கு இதுசெய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்;
நன்மை கடலி்ற் பெரிது= அதன் நன்மை கடலினும் பெரிதாம்.

பரிமேலழகர் உரை விளக்கம்:
இவை மூன்றுபாட்டானும் முறையே காரணமின்றிச் செய்ததூஉம், காலத்தினாற் செய்ததூஉம், பயன்தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

சாலமன் பாப்பையா உரை:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

Couplet:
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

Explanation:
A Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea.


No comments