குறள் - 0094
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல்
- The utterance of pleasant words
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
மு.வ உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் இன்பு உறூஉம் இன்சொலவர்க்கு= எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு;
துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்= துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை யுடைமையின், 'துவ்வாமை' யென்றார். 'யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொலவர்க்கு'ப் பகையும் நொதுமலுமின்றி உள்ளது நண்பேயாம்; ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து.
கருணாநிதி உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
Couplet:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
Explanation:
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.

No comments