Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0083

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.

மு. உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கைதுன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை = தன்னை நோக்கி வந்தவிருந்தை நாடோறும் புறந்தருவான தில்வாழ்க்கை;
பருவந்து பாழ்படுதல் இன்று = நல்குரவான் வருந்திக் கெடுதலில்லை.

பரிமேலழகர் உரை விளக்கம்:
நாடோறும் விருந்தோம்புவானுக்கு அதனாற் பொருடொலையாது மேன்மேற் கிளைக்கு மென்பதாம்.

கருணாநிதி  உரை:
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கைஅதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

Couplet:
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

Explanation:
Each day he tends the coming guest with kindly care; 
Painless, unfailing plenty shall his household share.

No comments