Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0076

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை  - The Possession of Love

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

மு. உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் = அன்பு துணையாவது அறத்திற்கே யென்று சொல்லுவர் சிலரறியார்;
மறத்திற்கும் அஃதே துணை = ஏனைமறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறநிகழ்ந்துழி அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின் மறத்தை நீக்குதற்குந் துணையாமென்பார், "மறத்திற்குமஃதே துணை" யென்றார், "துன்பத்திற் கியாரே துணையாவார்" (திருக்குறள், 1299) என்புழிப்போல.
இவையைந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது

கருணாநிதி  உரை:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

Couplet:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

Explanation:
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.


No comments