குறள் - 0066
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்
- The wealth of children
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மழலைச்சொல் கேளா தவர்.
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) குழல் இனிது யாழ் இனிது என்ப = குழலிசை யினிது யாழிசை யினிதென்று சொல்லுவர்;
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் = தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிதென்பரென்பது குறிப்பெச்சம்.
இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்புவகையானுங் கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
Couplet:
The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.
The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.
Explanation:
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.

No comments