Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0064

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

மு. உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

பரிமேலழகர் உரை: 
(இதன்பொருள்) அமிழ்தினும் ஆற்ற இனிதே = சுவையான் அமிழ்தத்தினும் மிக வினிமை யுடைத்து;
தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் = தம் மக்களது சிறுகையா னளாவப்பட்ட சோறு.

பரிமேலழகர் உரைவிளக்கம்: 
சிறுகையா னளாவலாவது #"இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும், நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்".
#(புறநானூறு- 188)

கருணாநிதி  உரை:
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

Couplet:
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

Explanation:
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have played.


No comments