Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0063

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 

 தம்தம் வினையான் வரும்.

மு.வ உரை:

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தம் மக்கள் தம்பொருள் என்ப = தம்புதல்வரைத் தம்பொருளென்று சொல்லுவர் அறிந்தோர்;
அவர்பொருள் தந்தம் வினையான் வரும் = அப்புதல்வர் செய்தபொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.
பரிமேலழகர் உரை விளக்கம்
தந்தம்வினை யென்புழித் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமை "முருகனது குறிஞ்சிநிலம்" என்புழிப்போல உரிமைப்பொருட்கண் வந்தது.
பொருள்செய்த மக்களைப்பொருளென உபசரித்தார்.
இவை யிரண்டுபாட்டானும் நன்மக்கட் பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

சாலமன் பாப்பையா உரை:

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

Couplet:

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

Explanation:

'Man's children are his fortune,' say the wise; 

 From each one's deeds his varied fortunes rise.


No comments