Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0060

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மு.வ உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) மங்கலம் என்ப மனைமாட்சி = ஒருவற்கு நன்மையென்று சொல்லுவர் அறிந்தோர் மனையாளது நற்குண நற்செய்கைகளை;

அதன் நன்கலம் (என்ப) நன்மக்கட் பேறு = அவைதமக்கு நல்லவணிகலமென்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.

பரிமேலழகர் உரைவிளக்கம்:

அறிந்தோரென்பது எஞ்சிநின்றது. மற்று அசைநிலை.

இதனால் வாழ்க்கைத்துணைக்கு ஆவதோரணிநலங் கூறி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

கருணாநிதி  உரை:
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

Couplet:
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.

Explanation:
The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.

No comments