Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0057

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மு. உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் = மகளிரைத் தலைவர் சிறையாற் காக்குங் காவல் என்னபயனைச் செய்யும்?
நிறைகாக்கும் காப்பே தலை = அவர் தமது நிறையாற் காக்கும் காவலே தலையாய காவல்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
சிறை - மதிலும் வாயில்காவலும் முதலாயின.
நிறை - நெஞ்சைக் கற்புநெறியினிறுத்தல்.
காவலிரண்டினும் நிறைக்காவலில்வழி ஏனைச்சிறைக்காவலாற் பயனில்லை யென்பார், 'நிறைகாக்குங் காப்பே தலை' யென்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

Couplet:
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

Explanation:
Of what avail is watch and ward? Honour's woman's safest guard.


No comments