Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0056

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மு. உரை:
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்): தற்காத்துத் தற்கொண்டான் பேணி = கற்பினின்றும் வழுவாமற் றன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றாற் பேணி;
தகைசான்ற சொல் காத்து = இருவர் மாட்டும் நன்மையமைந்த புகழ் நீங்காமற் காத்து;
சோர்வு இலாள் பெண் = மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினுங் கடைப்பிடியுடையாளே பெண்ணாவாள்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
தன்மாட்டுப் புகழாவது, வாழுமூர் கற்பாற் றன்னைப் புகழ்வது.
சோர்வு = மறவி.
இதனால் தற்புகழ்தற் சிறப்புக் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
Couplet:
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

Explanation:
Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.


No comments