குறள் - 0052
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
எனைமாட்சித் தாயினும் இல்.
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் = மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவனில்லாளிடத் தில்லையாயின்;
வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் = அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமை யுடைத்தாயினும் அஃதுடைத்தன்று.
கருணாநிதி உரை:
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
Couplet:
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
Explanation:
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.
No comments