Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0040

அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue 
அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

மு. உரை:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஒருவற்குச் செயற்பாலது அறனே = ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே;
உயற்பாலது பழியே = ஒழிதற்பான்மையது தீவினையே.

பரிமேலழகர் உரை விளக்கம்:
ஒரும் என்பன இரண்டும் அசைநிலை.
தேற்றேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
பழிக்கப்படுவதனைப் பழி யென்றார். இதனாற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.

கருணாநிதி  உரை:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

Couplet:
That is virtue which each ought to do, and that is vice which each should shun.

Explanation:
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.


No comments