குறள் - 0032
அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
மு.வ உரை:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை = ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;
அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு = அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்:
"அறத்தினூஉங் காக்கமு மில்லை" என மேற்சொல்லியதனையே அனுவதித்தார், அதனாற் கேடுவருதல் கூறுதற் பயன் நோக்கி.
இதனால் அது செய்யாவழிக் கேடுவருதல் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
Couplet:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
Explanation:
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.
No comments