Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0025

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

 இந்திரனே சாலுங் கரி.


மு.வ உரை:

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.


பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஐந்து அவித்தான் ஆற்றல் = புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு;
அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி = அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையுஞ் சான்று.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'ஐந்தும்' என்னும் முற்றும்மையும், 'ஆற்றற்கு' என்னும் நான்கன் உருபும் விகாரத்தால் தொக்கன.
தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவன் ஆற்றல் உணர்த்தினான்ஆகலின் 'இந்திரனே சாலுங்கரி' என்றார்.

கருணாநிதி  உரை:

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.


சாலமன் பாப்பையா உரை:

அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.


Couplet:

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.


Explanation:

Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell.


No comments