Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0023

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

மு.வ உரை:

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) இருமை வகை தெரிந்து = பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப வின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து;
ஈண்டு அறம் பூண்டார் பெருமை = அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
உலகு பிறங்கிற்று = உலகின்கண் உயர்ந்தது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
"தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்" என்புழிப் போல 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது.
பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.
இதனால், திகிரி உருட்டி உலகம் முழுதாண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.
இவை மூன்று பாட்டானும், நீத்தார்பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

Couplet: 

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

Explanation:

Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayed.


No comments