Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0021

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

மு.வ உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பரிமேலழகர் உரை:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை = தத்தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;
விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு= விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமிது எனவிரும்பும், நூல்களது துணிவு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நீன்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவந் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதன்மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித்துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம்; அஃதுண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய 'எனது' என்பதும், அகப்பற்றாகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம்முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க.
பனுவல் எனப் பொதுப்படக் கூறியவதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமயநூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவென்பது பெற்றாம்.
செய்தாரது துணிவு 'பனுவன்'மேல் ஏற்றப்பட்டது.

கருணாநிதி  உரை:
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் செ?ல்கின்றன.

Couplet:
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

Explanation:
The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood.

No comments