Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0018

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


வான் சிறப்பு - The Blessing of Rain

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மு.வ உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) வானோர்க்கும் ஈண்டுச் சிறப்பொடு பூசனை செல்லாது = தேவர்கட்கும் இவ்வுலகின் மக்களாற் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது?

வானம் வறக்குமேல் = மழை பெய்யாதாயின்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:

நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின், 'செல்லாது' என்றார்.

உம்மை சிறப்பும்மை.

நித்தியத்தின் தாழ்வு தீரச் செய்யப்படுவது, நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.


கருணாநிதி  உரை:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.

சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

Couplet:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

Explanation:
If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.

No comments