Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0015

அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue 
வான் சிறப்பு - The Blessing of Rain

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மு. உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) கெடுப்பதூஉம் = பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;
கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் = அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்;
எல்லாம் மழை = இவை எல்லாம் வல்லது மழை.
பரிமேலழகர் உரை விளக்கம்:
`மற்று` வினைமாற்றின்கண் வந்தது.
`ஆங்கு` என்பது மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல்.
கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், `கெட்டார்க்கு` என்றார்.
`எல்லாம்` என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி.
வல்லது என்பது அவாய்நிலையான் வந்தது.
மழையினது ஆற்றல் கூறியவாறு.

கருணாநிதி  உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.
Couplet:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

Explanation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.


No comments