Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0166

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அழுக்காறாமை - Not Envying

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 

 உண்பதூஉம் இன்றிக் கெடும்.

மு.வ உரை:

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

பரிமேலழகர் உரை
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்= ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்;
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்= உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்
பரிமேலழகர் உரைவிளக்கம்
கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப்பற்றிப் பொறாமை செய்தல். சுற்றம் கெடும் எனவே, அவன்கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர்பேறு பொறாமை, தன்பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.

கருணாநிதி  உரை:

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

Couplet:

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

Explanation:

Who scans good gifts to others given with envious eye, 

 His kin, with none to clothe or feed them, surely die.



No comments